100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் சிக்கிய பெண்!
காலி - சீனிகமவில் இன்று (9) நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டதாக மீட்டியாகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணிடம் சுமார் ஆறு கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று (8), சீனிகமவில் மூன்று மீனவர்கள் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் சுமார் ஐநூறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணை
இதன்படி, இன்று (9) கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், நேற்று அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக மீட்டியாகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |