தொடர்ந்து இருமியபடியே இருந்த பெண் -மருத்துவமனையில் அனுமதித்தவேளை காத்திருந்த அதிர்ச்சி
தொடர்ந்து இருமல் ஏற்பட்டுக் கொண்டே இருந்த பெண் ஒருவருக்கு நான்கு விலா எலும்புகள் முறிந்தது தொடர்பான அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
சீனாவின் ஷாங்காய் என்னும் பகுதியைச் சேர்ந்த ஹுவாங் என்ற பெண்ணுக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ஹுவாங் காரமான உணவுகளை அருந்திக் கொண்டிருந்த சமயத்தில் தொடர்ந்து அவர் இருமிக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இருமிக்கொண்டே இருந்த அவருக்கு கடும் அதிர்ச்சி சம்பவம் ஒன்றும் அங்கே அரங்கேறி உள்ளது. ஹுவாங்கின் மார்பு பகுதியில் ஏதோ முறிந்ததை போன்ற சத்தத்தை அவர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அதனை பெரிதாக ஹுவாங் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.
மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி

ஆனால், தொடர்ந்து தன்னால் பேச முடியாமலும், மூச்சு விடும் போது வலியையும் ஹுவாங் உணர்ந்ததாக சொல்லப்படுகிறது. எனவே, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை ஸ்கான் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. இதற்கு காரணம், ஹுவாங்கின் நான்கு விலா எலும்புகள் முறிந்திருப்பது ஸ்கானில் கண்டுபிடிக்கப்பட்டது தான்.
இதனால், அவரது மார்புப் பகுதியில் கட்டு போட்டு ஒரு மாத காலம் ஓய்வெடுத்தால் மட்டும் தான் குணமடைய முடியும் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலும்புகள் உடைய காரணம்

ஹுவாங் சற்று உடல் மெலிந்து எலும்புகள் வெளியே தெரியும் படி இருப்பதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதன் காரணமாக இருமல் ஏற்பட்டு தாங்காமல் விலா எலும்புகள் உடைந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடுமையாக இருமியதால் பெண்ணின் விலா எலும்புகள் உடைந்தது தொடர்பான தகவல், தற்போது உலக அளவில் பலரது மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.