ஈரான் மீதான தாக்குதல் எதிரொலி : கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
Fuel Price In World
Iran-Israel War
By Sumithiran
அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதால், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சடுதியான வகையில் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 10% அதிகரித்துள்ளது, மேலும் அதன் விலை தற்போது ஒரு பீப்பாய்க்கு 80 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
விலை உயர்வுக்கு முக்கிய காரணம்
தற்போதைய மோதல் சூழ்நிலை தொடர்ந்து அதிகரித்தால், எதிர்காலத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாக உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |