இலங்கையில் கிடைத்த அபூர்வ “நீலக்கல்” (Photo)
உலகிலேயே மிகப் பெரிய குருந்தம் ரக நீல மாணிக்க கல் படிகம் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நீல நிற மாணிக்க கல்லானது 310 கிலோகிராம் நிறைகொண்டதென தேசிய தங்காபரணம் மற்றும் இரத்தினக்கல் அதிகார சபை கூறியுள்ளது.
இரத்தினவியல் நிறுவகம் மற்றும் ஆராய்ச்சி தனியார் லிமிடெட்டிற்கு சொந்தமான இடத்திலேயே இந்த நீல மாணிக்க கல் படிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பட்டுகெதர என்ற இடத்தில் இந்த மாணிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தங்காபரணம் மற்றும் இரத்தினக்கல் அதிகார சபை கூறியுள்ளது.
இந்த மாணிக்கல்லானது இன்று ஹொரணையில் வைத்து ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், “ஆசியாவின் இராணி” என பெயரிடப்பட்டுள்ள இந்த மாணிக்கல், தேசிய தங்காபரணம் மற்றும் இரத்தினக்கல் அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு இலட்சத்து 55 ஆயிரம் கரட் கொண்ட இந்த மாணிக்கல்லானது பல இலட்சம் ரூபா பெறுமதி கொண்டதென இரத்தினக்கல் அதிகார சபை கூறியுள்ளது.