சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரை! அவசர அவசரமாக ரிட் மனு தாக்கல்
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையின் விஹாராபதி கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், விகாரை வளாகத்தின் ஒரு பகுதியை இடிப்பதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கடலோரப் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவின்படி, விகாரை 1951 ஆம் ஆண்டு பௌத்த சமயக் கட்டளைச் சட்டத்தின்படி அமரபுர நிகாயத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த வழங்கிய பத்திரம்
அத்தோடு, 2014 ஜூன் 6 ஆம் திகதி அன்று, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அப்போது விஹாராபதியாக பணியாற்றிய மஹிந்த வன்சம திஸ்ஸ தேரரின் காலத்தில், விகாரைக்கு செல்லுபடியாகும் பத்திரத்தை வழங்கினார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாநகர சபை, விகாரைக்குச் சொந்தமான 57/TG எண் கொண்ட நிலத்தை மேம்படுத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதைக் குறிக்கும் கடிதத்தை முன்னர் வெளியிட்டதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, விகாரை வளாகத்தின் ஒரு பகுதியை இடிக்க முயற்சிப்பது சட்டவிரோதமானது என்றும், அத்தகைய நடவடிக்கையைத் தடுக்க நீதிமன்ற உத்தரவை நாடுவதாகவும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் வாதிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 6 மணி நேரம் முன்