சாரதியை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி! அதிர்ச்சியில் யோசித ராஜபக்ஸ
srilanka
yoshitha rajapaksa
By Vasanth
மஹரகம - ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரியின் செயலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய மகன் யோசித ராஜபக்ஸ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர், “இன்று பரபரப்பான வீதியில் ஒரு பொலிஸ் அதிகாரி இரக்கமின்றி ஒருவரை அடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். சீருடை அணிந்த ஆண்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடாது.
அவர்களுக்கு பாதுகாப்பாகவும் காவல்காரர்களாகவும் இருக்க வேண்டும்.
நான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றேன், நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வேன்.” என பதிவிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்