கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் ஏற்பட்ட துயரம்
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தின் கூரையில் ஏறி சென்ற இளைஞன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (12)காலை ஹொரபே தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடருந்து சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், தொடருந்தின் மேலே இருந்து பயணித்து கொண்டிருந்த போது ஹொரபே தொடருந்து நிலையத்தின் கூரையின் மேற்பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கம்பஹா மொரகொட பிரதேசத்தை சேர்ந்த மொரட்டுவ கைத்தொழில் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் கல்வி கற்கும் பொறியியல் மாணவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.