இராணுவ புலனாய்வு பிரிவினரால் ஆனையிறவில் இளைஞர் கைது
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Jaso
இராணுவ புலனாய்வு பிரிவினரால் கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவைச்சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சா போதைப்பொருளுடன்
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிறவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளுடன் 390 கிராம் கஞ்சா போதைபொருளை இவர் கொண்டு சென்றமை கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
