யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் வைத்து நேற்றிரவு (21) ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 5 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலை
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |