யாழ்ப்பாணத்தில் வாளுடன் இளைஞன் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
Arrest
By Theepan
யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் 20 போதைமாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம்(06) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் பகுதியில் இளைஞன் போதை மாத்திரைகளுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞனை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் வாள்
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் இருந்து 20 போதை மாத்திரைகள் மற்றும் கூரிய வாள் ஒன்றினையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி