மட்டக்களப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 பேர் கைது
மட்டக்களப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 11 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெல்லாவெளி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திக்கோடை ஆனந்தப் பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள வீடு ஒன்றை இன்று (05) அதிகாலை 5.00 மணியளவில் காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
புத்தளம், அட்டாளைச்சேனை, கல்கமுவ, பெரிய போரதீவு, பெரியநீலாவணை, பொல்காவலை, திக்கோடை பிரதேசங்களைச் சேர்ந்த 11 சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஸ்கானர் இயந்திரம் மற்றும் வான் ஓன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |