நீரில் விஷம் கலந்ததால் 12 மாடுகள் பலி! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்
Vavuniya
Sri Lanka
By pavan
வவுனியா, பூம்புகார் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மேய்சலில் ஈடுபட்ட 12 மாடுகள் மரணமடைந்துள்ளதுடன், பல மாடுகள் உடல் சோர்வுற்று அவதிக்குள்ளாகியுள்ளன.
குறித்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தினுள் அப்பிரதேசவாசிகளின் மாடுகள் சில உட்புகுந்து அங்குள்ள உழுந்து மற்றும் நெற் பயிர்களை மேய்ந்துள்ளதாகவும், இதனை கண்ணுற்ற விவசாய நில உரிமையாளர் ஆத்திரமடைந்து அம்மாடுகளிற்கு யூரியா மற்றும் பூச்சிகொல்லி மருந்தையும் நீரில் கலந்து குடிக்க வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனை அம்மாடுகள் பருகி உயிரிழந்துள்ளதாக அக்கிராம கமக்கார அமைப்பினர் மற்றும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி