இலங்கைக்கு வருகை தரும் 14 பேர் கொண்ட இந்திய கடற்றொழிலாளர்கள் குழு

Indian fishermen Fishing Sri Lanka India Sri Lanka Fisherman
By Shalini Balachandran Aug 25, 2025 05:49 AM GMT
Report

இந்தியாவில் (India) இருந்து 14 பேர் கொண்ட கடற்றொழிலாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு (Sri Lanka) வருகை தரவுள்ளனர்.

குறித்த குழு ராமேஸ்வரத்தில் (Rameswaram) இருந்து இலங்கை நோக்கி மீன்பிடி படகில் வருகை தரவுள்ளனர்.

அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்படாமல் உள்ள ஏழு மீன்பிடி விசைப் படகுகளை ஆய்வு செய்து மீட்டும் இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக அவர்கள் இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ICU வில் உள்ள ரணிலுக்கு அடுத்து என்ன நடக்கும் - அநுர அரசின் அமைச்சரின் அறிவிப்பு

ICU வில் உள்ள ரணிலுக்கு அடுத்து என்ன நடக்கும் - அநுர அரசின் அமைச்சரின் அறிவிப்பு

கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த 2022-23 ஆகிய ஆண்டுகளில் மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இலங்கைக்கு வருகை தரும் 14 பேர் கொண்ட இந்திய கடற்றொழிலாளர்கள் குழு | 14 Indian Fishermen Visit Lanka Retrieve 7 Boats

இந்தநிலையில் எல்லை தாண்டிய வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் 2023 ஆம் ஆண்டு ஏழு படகுகள் விடுதலை செய்யப்பட்டது.

அந்த படகுகளை மீட்பதற்காக படகின் உரிமையாளர்கள் இந்திய மற்றும் இலங்கை அரசிடம் மகஜர் கையளித்திருந்தனர்.

பிரதி காவல்துறை மா அதிபர் அதிரடியாக கைது

பிரதி காவல்துறை மா அதிபர் அதிரடியாக கைது

படகு உரிமையாளர்கள்

இருப்பினும், அதற்கிடையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீனவர்களின் மனு பரிசீலிக்க படாமல் இருந்தது வந்த நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை கடந்த வாரம் மீன்பிடி படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்டு இந்தியாவிற்கு எடுத்து செல்ல அனுமதி அளித்தனர்.

இலங்கைக்கு வருகை தரும் 14 பேர் கொண்ட இந்திய கடற்றொழிலாளர்கள் குழு | 14 Indian Fishermen Visit Lanka Retrieve 7 Boats

இதனடிப்படையில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை செய்யப்பட்ட ஏழு படகுகளை பார்வையிட்டு திரும்ப எடுத்து வருவதற்காக இன்று (25) இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் படகு உரிமையாளர்கள் என 14 பேர் கொண்ட குழு விசைப்படகு ஒன்றில் இலங்கை யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட கடற்றொழிலாளர்கள் குழுவை மீன்பிடி படகுடன் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை கடற்படை வசம் ஒப்படைக்க உள்ளனர்.

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

உறுதி தன்மை

ஒப்படைக்கப்படும் கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று மாலை சென்றடைந்து அங்கு இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட ஏழு படகுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

இலங்கைக்கு வருகை தரும் 14 பேர் கொண்ட இந்திய கடற்றொழிலாளர்கள் குழு | 14 Indian Fishermen Visit Lanka Retrieve 7 Boats

படகுகள் மீட்கும் நிலையில் இருக்கும் பட்சத்தில் படகை மீட்டு வரவும், எஞ்சின் கோளாறு காரணமாக மீட்க முடியாமல் கடலில் மூழ்கிய படகுகளை தமிழகத்திற்கு எடுத்து வருவதற்கான பணிகள் தொடர்பாக இந்த குழு ஆய்வு செய்ய உள்ளனர்.

இவர்கள் இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி படகுகளின் தரம், உறுதி தன்மை மற்றும் இன்ஜின்களில் ஏற்பட்ட பழுது குறித்து ஆய்வு செய்து நாளை (26) மாலை மீண்டும் ராமேஸ்வரம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு பிணை வழங்க சிக்கல் - பின்னணியில் இவர்கள் - சாடும் பேராசிரியர்

ரணிலுக்கு பிணை வழங்க சிக்கல் - பின்னணியில் இவர்கள் - சாடும் பேராசிரியர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015