அரச ஊழியர் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்
இலங்கையில் (Srilanka) அரசு மற்றும் அரை - அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளதாக ஆய்வென்றின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஆய்வின்படி அரச மற்றும் அரை - அரசத் துறைகளில் மொத்தம் 1,119,475 ஊழியர்கள் இருந்தனர் என்றும் 2024 ஆய்வில் இந்த எண்ணிக்கை 46,543 ஆல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தரவுகள் 2024 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரை - அரச நிறுவனங்கள்
இந்த ஆய்வில் சுமார் 32,500 அரச மற்றும் அரை - அரச நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச மற்றும் அரை - அரச துறைகளில் மொத்தம் 1,150,018 ஊழியர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்களில் 50.5% ஆண்கள் மற்றும் 49.5% பெண்கள் என அறிக்கை குறிப்பிடுகிறது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம்
இந்த அறிக்கையின்படி, அரசத் துறையில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் (59.5%) மத்திய அரசின் கீழ் பணியாற்றுகின்றனர்.

எவ்வாறாயினும், அரை - அரச நிறுவனங்களின் துணை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இராணுவம், கடற்படை, மற்றும் விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை என சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்