யாழ். ஐ.பி.சி கலையகத்தில் நினைவு கூரப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவு தினம்
தமிழ்தேசிய ஊடகப்பரப்பில் தனித்துவமான பங்களிப்பைச் செய்தவராகக் கருதப்படும் ஐபிசி தமிழின் ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் ஐ.பி.சி கலையகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு, தராக்கி சிவராமின் ஊடகப் பங்களிப்புகள் மற்றும் தமிழ்தேசிய சிந்தனையில் அவர் வகித்த இடம் குறித்து நினைவுகூர்ந்தனர்.
தமிழர் அரசியல், சமூக மற்றும் மனித உரிமை விடயங்களை துல்லியமாகவும் துணிச்சலுடனும் வெளிப்படுத்திய ஊடகவியலாளராக தராக்கி சிவராம் போற்றப்படுகிறார்.
ஊடகப் பயணம்
அவரது எழுத்துகளும் பகுப்பாய்வுகளும் இன்றளவும் பலருக்கு வழிகாட்டியாக உள்ளன என உரையாற்றியவர்கள் குறிப்பிட்டனர்.

நினைவு நிகழ்வின் ஒரு பகுதியாக மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரது வாழ்க்கை மற்றும் பணியைப் பிரதிபலிக்கும் நினைவு உரைகளும் இடம்பெற்றன.
தமிழ்தேசிய ஊடகப்பரப்பில் இன்றுவரை ஈடுசெய்யப்படமுடியாத ஒரவராகவும் அதேநேரம் தமிழர் தேசத்தின் முன்வைத்து எண்ணப்படக்கூடிய ஒருவருமாகிய IBC தமிழின் ஊடகவியலாளர் தராக்கி ஊடக வரலாற்றில் முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளதாகவும், அவரின் பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும் எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






