24 மணிநேரத்தில் உக்ரைன் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Jaso
உக்ரைனின் (ukraine)குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ஆயுத படையை சேர்ந்த 280 பேர் தமது படையினர் 24 மணிநேரத்தில் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய(russia) பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 3 கார்கள், மின்னணு போர் நிலையம் மற்றும் 2 பீரங்கி ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பகுதியிலும் பேரிழப்பு
ஒட்டுமொத்தத்தில், குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் நாடு 37,935 வீரர்கள் மற்றும் 229 பீரங்கிகளை இழந்துள்ளது என்றும் அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டில் தொடங்கிய நிலையில் இரண்டு பகுதியிலுமே கடுமையான இழப்பக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்