இடையில் சிக்கிய அமெரிக்கா: இஸ்ரேலின் கோர முகத்தை கண்டு திணறும் ஈரான்
இஸ்ரேல் ஈரானில் மேற்கொண்ட தாக்குதல்களில் 78 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களில் சிறப்பு இராணுவத் தளபதிகளும் அடங்குகிறார்கள் என்றும், ஈரானின் ஐ.நா. தூதுவர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அவர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் வெளியிட்டார்.
மேலும், இத்தாக்குதலில் 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும், பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் இரவானி கூறினார்.
அமெரிக்கா மீது கடும் குற்றச்சாட்டு
இஸ்ரேலுக்கு தகவல் சேகரிப்பு மற்றும் அரசியல் ஆதரவை வழங்கிய அமெரிக்கா, இந்த தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலையில் இருக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
“இந்தத் தாக்குதலுக்குப் பங்குள்ள மற்றும் ஆதரவளிக்கும் நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இதன் விளைவுகளுக்குப் பூரணமாகப் பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
கடும் எதிர்ப்பு
அத்துடன், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களின் மூலமாக இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க ஆயுதங்கள் மூலம் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் எங்கள் மக்கள் உயிரிழந்ததை நாங்கள் மறந்துவிட மாட்டோம்,” என இரவானி கூறினார்.
இந்த அறிவிப்புகள், மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் தீவிரத்தையும், மேல் நாடுகளின் ஆதரவு குறித்து ஈரானின் கடும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
