இலங்கையில் பாரிய குற்றங்களில் ஈடுபட வருகை தந்த சீனர்கள் கட்டுநாயக்காவில் சிக்கினர்
சைபர் குற்றங்களைச் செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீன நாட்டவர்களை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழு ஒன்று, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைது செய்தது.
அவர்களிடமிருந்து ரூ. 24.20 மில்லியன் மதிப்புள்ள மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சீன நாட்டவர்கள் இன்று (04/16) அதிகாலையில், சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான எண் MU-6912, சைனா ஏர்லைன்ஸ் விமான எண் CA-425 மற்றும் ஏர் ஏசியா விமான எண் FD-047 ஆகியவற்றில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்திருந்தனர்.
ஸ்கான் சோதனையில் வெளிவந்த இரகசியம்
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களை ஸ்கான் சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர்களின் உடல்கள் செலோபேன் டேப்பால் மூடப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

அவர்களது ஆடைகளுக்குள் 383 பயன்படுத்தப்பட்ட கைபேசிகள், 101 டேப்லெட் கணினிகள் மற்றும் 6 வைஃபை ரவுட்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து, இவ்விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
images credit -ada
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |