ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை உயிருடன் மீட்பு!

Karnataka India World
By Shalini Balachandran Apr 04, 2024 11:12 AM GMT
Report

புதிய இணைப்பு

500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த 14 மாத குழந்தை சாத்விக்கின் அசைவுகளை ஆழ்துளை கிணற்றுக்குள் கேமிராக்களை விட்டு மீட்பு பணியினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில்,  இன்று(04) காலை முதல் மீட்புப்பணியை தீவிரப்படுத்திய மீட்பு குழுவினர் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் நேற்று முதல் தொடர்ந்து பணியாற்றி குழந்தையை உயிருடன் மீட்ட குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்த 14 மாத சாத்விக் என்ற குழந்தை மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று(03) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், சதீஷ் முஜகொண்டா (30) இவரது மனைவி பூஜா (26) இவர்களுடைய 14 மாத ஆண் குழந்தையான சாத்விக் என்பவரே இவ்வாறு ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.

யாழில் இறைச்சிக்காக மாடுகளைக் கடத்திய காவல்துறை உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது

யாழில் இறைச்சிக்காக மாடுகளைக் கடத்திய காவல்துறை உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது

ஆழ்துளை கிணறு 

அதாவது குறித்த பெற்றோரிற்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் எலுமிச்சை பயிரிட்டிருந்த நிலையில் தற்போது மழையில்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்தையடுத்து சதீஷ் முஜகொண்டாவின் தந்தை சங்கரப்பா என்பவர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை உயிருடன் மீட்பு! | A 14 Month Old Boy Fell Into A Borehole India

இவ்வாறு 500 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்காமையால் அவர் அதை மூடாமல் விட்டுவிட்ட நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சதீஷ் முஜகொண்டாவின் 14 மாத குழந்தை சாத்விக் மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் எட்டு வருடங்கள் தங்கியிருந்த சம்பந்தன்

எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் எட்டு வருடங்கள் தங்கியிருந்த சம்பந்தன்

மீட்பு குழுவினர்

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை உயிருடன் மீட்பு! | A 14 Month Old Boy Fell Into A Borehole India

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியை தொடங்கிய நிலையில் குழந்தை சாத்விக் 16 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து முதல் கட்டமாக மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைக்கு பைப் மூலம் ஒட்சிசன் செல்ல ஏற்பாடு செய்ததுடன் மேலும் ஆழ்துளை கிணற்றுக்குள் கமராக்களை(Camera) உள்ளே விட்டு குழந்தையின் அசைவை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் போலி வைத்தியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் அதிகரித்து வரும் போலி வைத்தியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை


மீட்பு பணி

இரவானதால் மீட்பு பணிக்காக ராட்சத விளக்குகள் பொறுத்தப்பட்டு விடிய விடிய மீட்பு பணிகள் தொடர்ந்ததுடன் கர்நாடக மாநிலம் பெல்காம், கலபுரக்கி மற்றும் ஐதராபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை உயிருடன் மீட்பு! | A 14 Month Old Boy Fell Into A Borehole India

அவர்கள் ஆழ்துளை கிணற்றை ஒட்டி இணையாக ஜே.சி.பி மூலம் குழி தோண்டி குழந்தை இருக்கும் இடத்தை நெருங்குவதுடன் தொடர்ந்து மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பூபாலன், காவல்துறை சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவன் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இன்று(04) காலை நிலவரப்படி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் கை மற்றும் கால்கள் அசைவதை கமரா மூலம் மீட்பு குழுவினர் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கு எதிராக நடக்கவுள்ள இணையத்தள தாக்குதல்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்

இஸ்ரேலுக்கு எதிராக நடக்கவுள்ள இணையத்தள தாக்குதல்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024