யாழில் 21 நாட்களேயான சிசுவிற்கு நேர்ந்த துயரம்
யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று இன்றையதினம்(07) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சுன்னாகம் - சபாபதிப்பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்த யசிந்தன் லாவண்யா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், தாயார் இன்று குழந்தைக்கு பாலூட்டி உறங்க வைத்தார். பின்னர் மதியம் 1.30 மணியளவில் குழந்தையை தூக்கத்தில் இருந்து எழுப்பியவேளை குழந்தை வாந்தியெடுத்துவிட்டு அசைவற்று காணப்பட்டது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை
இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சாட்சிகளை சுன்னாகம் காவல்துறையினர் நெறிப்படுத்தினர். சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
