யாழ்ப்பாணத்தில் அதிரடியாக வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனை
Sri Lanka Police
STF
Jaffna
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்று(07) சோதனை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே காவல்துறை மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.
காவல்துறை பெற்றுக்கொண்ட தேடுதல் அனுமதி
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் காவல்துறையினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது.

சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனொரு கட்டமாக குறித்த நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்