மகனை காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கிப் பலி
அனுராதபுரம் - மிகிந்தலை பகுதியில் குளத்தில் நீடாரச் சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குளத்தில் நீராடச் சென்ற தனது மகன் உள்ளிட்ட சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தையே நேற்று (17.04.2026) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மிகிந்தலை - மரதன்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சம்பவத்தில் உயிரிழந்தவர் தனது நண்பருடன் மரதன்குளம் பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

இதன்போது அங்கு நீராடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மற்றொரு சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டுள்ளார்.
குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக அவர் குளத்தில் குதித்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், 11 மற்றும் 12 வயதுடைய அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் எந்தவித ஆபத்தும் இன்றி மீட்க்கப்பட்டுள்ளதாக கதவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி உயிரிழந்தவரின் சடலம் அனுராதபுர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகிந்தலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |