நிறுத்தி வைப்பட்டடிருந்த காருடன் மோதுண்டு ஸ்தலத்திலேயே ஒருவர் பலி! பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை (காணொளி)
நுவரேலியா – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரேலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாடின்மையால் புஸ்ஸலாவ பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரேலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் குறித்த முச்சக்கரவண்டி மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக புஸ்ஸலாவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, அதில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய டீ.எம்.ருபாநந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.