மாற்று அரசாங்கம் நாமே!! மார்தட்டும் சஜித் தரப்பு
தற்போதைய அரசாங்கம் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து எதேச்சதிகார ஆட்சியில் ஈடுபடும் சூழ்நிலையில் இந்த நாட்டில் மாற்று அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டு மக்கள் தலைநகருக்கு வந்து, அரசாங்கத்தின் கண்களைத் திறக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை எனக் கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்பொழுது நாட்டின் இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர், கூஜா தூக்கிகளையும் கும்பிடு போடுபவர்களையும் மாத்திரமே அரசாங்கம் விரும்புகிறது.
அரசாங்கம் மற்றும் அமைச்சர்களின் கைக்கூலியாக மாறாமல், உண்மையைப் பேசும் கல்விமான்களை அரசு வெறுக்கிறது.
இதனாலாயே ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் தன்னிச்சையான செயற்படலுக்கு எதிராக எழுந்து நிற்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.