சிறிலங்கா அரச தலைவரின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு
Udaya Gammanpila
SriLanka
Gotabaya rajapaksa
By Chanakyan
பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையினை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya rajapaksa) தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிப்பினை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு (Udaya Gammanpila) விடுத்துள்ளார்.
அமைச்சரவை கூட்டமானது நேற்றிரவு நடைபெற்றுள்ளது. இதன்போதே அரச தலைவர் மேற்படி பணிப்பினை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் சடுதியாக நாளுக்கு நாள் விலையேற்றம் அதிகரித்துக கொண்டே செல்கின்றது.
கோதுமை மா, சீமெந்து, பால்மா, காஸ் மற்றும் கோதுமை உற்பத்திகளான பாண், பணிஸ், கொத்து போன்றனவும். றைஸ் மற்றும் பால்தேநீர் உள்ளடங்களாக சிற்றுண்டிகளுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டன.
மேலும் பேருந்துக் கட்டணத்தினை உயர்த்த வேண்டும் எனவும் தனியார் போக்குவரத்துச் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.