பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே அரசின் நிலைப்பாடு : நீதியமைச்சர் அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act Harshana Nanayakkara
By Sathangani Apr 16, 2025 03:43 AM GMT
Report

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் இன ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பான பரிந்துரைகளை விரைந்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையிலான குழுவினரிடம் நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கடந்த வாரம் நீதியமைச்சில் நடைபெற்றது.

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா....! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா....! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை

மனித உரிமைகள் 

இக்கலந்துரையாடலில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து ஆராய்வதற்காகக் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே அரசின் நிலைப்பாடு : நீதியமைச்சர் அறிவிப்பு | Anura Govt S Stance Is To Repeal The Pta Harshana

அதன்படி அங்கு கருத்து வெளியிட்ட ஹர்ஷன நாணயக்கார, “பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் 

அதேபோன்று 'இதற்குப் பதிலாகப் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய சட்டமானது உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கக்கூடியவகையில் அமையவேண்டும்.

அதேவேளை அச்சட்டம் சர்வதேச நியமங்கள் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, எமது நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பவற்றைப் பாதிக்காத வகையிலும் இருக்கவேண்டும்.

2025 உள்ளூராட்சி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

2025 உள்ளூராட்சி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

கடந்தகால அரசாங்கங்கள் 

அத்தோடு கடந்தகால அரசாங்கங்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே அரசின் நிலைப்பாடு : நீதியமைச்சர் அறிவிப்பு | Anura Govt S Stance Is To Repeal The Pta Harshana

எனவே தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் குழுவானது மிகக்குறுகிய காலத்துக்குள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதுடன் தொடர்புடைய விடயங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும் எதிர்வரும் மேமாத தொடக்கத்திலிருந்து இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகங்கள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்“ என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பற்றி எரியும் மத்திய கிழக்கு : இஸ்ரேலிய போர் நிறுத்தத்தை நிராகரித்த ஹமாஸ்

பற்றி எரியும் மத்திய கிழக்கு : இஸ்ரேலிய போர் நிறுத்தத்தை நிராகரித்த ஹமாஸ்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்