அநுர அமைச்சரின் பதவி துறப்பு! ஏப்ரல்-1 முட்டாள் தினத்துக்கு சாகா வரம்!
இன்று ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி! முன்னர் எல்லாம் இந்த April Fools' Day ஆகிய கேலிக்குரிய முட்டாள்கள் தினம் பிரபலம். ஆனால் இப்போதெல்லாம் இந்த ஏப்ரல் 1 தினத்தில் பெரும் ஏமாற்றங்கள் வருவதில்லை.
பொதுவாகவே ஏப்ரல் முதலாம் திகதியன்று ஒருவரை கேலிக்கு ஏமாற்றி, அவரை முட்டாளாக்கிவிடும் ஏப்ரல்பூல் விளையாட்டு முன்னர் பிரபலமானது. ஆனால் இப்போது மக்களை முட்டாள்களாக்கத் தலைப்படும் நகர்வுகளை அரசியல்வாதிகள் எல்லா நாட்களிலும் செய்வதால் தனியே எதற்கு ஏப்ரல் முட்டாள்தினம்?எல்லா நாட்களிலும் மக்களுக்கு ஏப்ரல் 1 தான்.
இதில் சிறிலங்காவின் அநுர தரப்பு ஆட்சிக்கும் விதிவிலக்கு இல்லை. அநுரகுமார திசாநாயக்க அரசதலைவராக பதவியேற்ற பின்னர் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியில் தனது அமைச்சர்களில் எவர்மீதும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அவர் மறுநாளே பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றார்.
ஆனால் என்னே ஆச்சரியம் அவரது எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது கடந்தவாரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்செய்யபட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர் இன்னமும்; அமைச்சராக இருகிறார்.
ஒருவேளை அவரது ஆட்சியில் அமைச்சர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டால் மறுநாள் அவர் பதவி நீக்கப்படுவார் என்ற அநுரவின் உறுதிமொழியை இன்று நினைத்தால் அது ஏப்ரல் 1 ஏமாற்றமாக உள்ள நிலையில் உள்ளூர் மற்றும் மத்தியகிழக்குபோர் தொடர்பான ட்ரம்பின் புதிய பரபரப்பு நகர்வுகளையும் தழுவிவருகிறது செய்திவீச்சு....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்