இராணுவத்தினர் வசமுள்ள முல்லைத்தீவு தபால் நிலைய காணி விடுவிப்பு : வெளியான அறிவிப்பு
முல்லைத்தீவு தபால் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை வரும் ஜூன் மாதத்திற்குள் விடுவிக்க இராணுவம் உறுதியளித்துள்ளதாக வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கெளஷல்யா ஆரியரத்ன (Kaushalya Ariyarathna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய போதே கெளஷல்யா ஆரியரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு தபால் நிலையம் தற்போது ஒரு தனியார் கட்டடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருகின்றது.
தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்தல்
குறித்த தபால் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் தற்போது இராணுவத்தின் 23-வது படைப்பிரிவு நிலை கொண்டுள்ளது.

இந்த நிலையில், அதனை 2026 ஜூன் மாதத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் வாய்மொழி மூலமான உறுதியை வழங்கியுள்ளது.
இந்தக் காணியை முறையாக தபால் திணைக்களத்திடம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணி விடுவிக்கப்பட்ட பின்னர், 2027-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய தபால் நிலையக் கட்டடத்தை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |