போலியான சான்றிதழைப் பயன்படுத்தி ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது!

CID - Sri Lanka Police Jaffna Mullaitivu
By Sathangani Sep 09, 2023 10:00 AM GMT
Report

போலியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து ஆசிரியராக கடமையாற்றிய நபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினரால் நேற்று (8) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் சேவையில் பணியாற்றியுள்ளதுடன் முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றினார்.

இதேவேளை குறித்த நபருக்கு போலியான பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை தயாரித்து வழங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

இலங்கையை மையமாக்கி பெட்ரோலிய வர்த்தகம்: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டம்

இலங்கையை மையமாக்கி பெட்ரோலிய வர்த்தகம்: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டம்

போலியானது எனக் கண்டறியப்பட்டது

ஆசிரியர் சேவையில்  பதவிநிலை உயர்வு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் உறுதிப்படுத்தலுக்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட போதே அது போலியானது எனக் கண்டறியப்பட்டது.

போலியான சான்றிதழைப் பயன்படுத்தி ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது! | Arrest For Acting A Teacher Using Fake Certificate

இதன்பின்னர் மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறப்பு குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த நபர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய சில வருடங்களின் பின் மாகாண கல்வி அமைச்சினால் தொண்டர் ஆசிரியராக இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இத்தாலி செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்காவில் கைது

இத்தாலி செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்காவில் கைது

மோசடிக் குற்றச்சாட்டு

2019ஆம் ஆண்டில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3இற்கு உள்ளீர்க்கும் போது குறித்த நபருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

போலியான சான்றிதழைப் பயன்படுத்தி ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது! | Arrest For Acting A Teacher Using Fake Certificate

இந்நிலையில் 3 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக தொழில் புரிந்து சம்பளம் பெற்றுவந்த நிலையில் பதவிநிலை உயர்வுக்காக கல்வித் தகைமை ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை சான்றிதழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றில் க.பொ.த. உயர்தர பரீட்சை சான்றிதழ் சுட்டெண் தவறு என்பது கண்டறியப்பட்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் காவல்துறை திணைக்களத்துக்கு குறித்த நபர் மீது மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் அறிக்கையிடப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

நீதிமன்றில் முன்னிலை

குறித்த நபர் மீதான விசாரணை யாழ்ப்பாணம் காவல்துறை சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. காவல்துறைப் பரிசோதகர் குணரோஜன் தலைமையிலான சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து மோசடி செய்த நபரைக் கைது செய்தனர்.

போலியான சான்றிதழைப் பயன்படுத்தி ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது! | Arrest For Acting A Teacher Using Fake Certificate

அத்துடன், அவருக்கு உயர்தரப் பரீட்சையின் போலி சான்றிதழை தயாரித்து வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மோசடி நபர் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளில் சித்தியடையவில்லை எனவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நாளை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024