அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காததற்கு அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உடனடியாக ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வது முறையான முறையில் நடைபெறவில்லை என்றும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தகுதியுடையவர்கள்
அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, வறுமையில் வாடும் தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்குமாறும் பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், வீடுகளில் நுகரப்படும் மின் அலகுகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் மின்கட்டணத்தை வைத்து வறுமையை அடையாளம் காண முடியும் என்று குழு தெரிவித்துள்ளது.
பயனாளிகள் தேர்வு
மேலும், பயனாளிகள் தேர்வில் தற்போது நடைமுறையில் உள்ள மதிப்பெண் முறையை மாற்றி அமைக்க உள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்ற நேற்றையதினம்(28) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |