மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : நாளையதினம் வங்கிகளுக்கு வரப்போகும் பணம்
அஸ்வெசும முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கு தகுதி பெற்ற பயனாளிகளின் ஜனவரி உதவித்தொகையும், இரண்டு கட்டங்களுக்கான ஜனவரி முதியோர் உதவித்தொகையும் நாளை (28) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி,அஸ்வெசுமவின் முதல் கட்டம் தொடர்பாக, ரூ. 11,234,713,750.00 தொகை 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.
முதியோர் உதவித்தொகை
அஸ்வெசுமவின் முதல் கட்டத்திற்கான ஜனவரி முதியோர் உதவித்தொகை ரூ. 3,092,200,000.00 தொகை 618,440 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

மேலும், நிவாரணத்தின் இரண்டாம் கட்டத்துடன் தொடர்புடைய ஜனவரி மாத உதவித்தொகையாக, ரூ. 2,235,137,500.00 தொகை 248,454பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.
ஜனவரி மாத உதவித்தொகை
நிவாரணத்தின் இரண்டாம் கட்டத்துடன் தொடர்புடைய ஜனவரி மாத உதவித்தொகையாக, ரூ. 340,915,000.00 தொகை 68,183 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில், கொடுப்பனவுத் தொகை நாளை வரவு வைக்கப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |