ரணிலுக்கு பிணை வழங்க சிக்கல் - பின்னணியில் இவர்கள் - சாடும் பேராசிரியர்
ரணிலுக்கு பிணை வழங்கும் செயல்பாட்டில் சட்டமா அதிபர் திணைக்களம் தலையிடுவது என்பது அரசாங்கத்தின் அரசியல் தலையீடு என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி (Nirmal Ranjith Devasiri) தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக பதிவொன்றிலேயே பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உயர் பதவியை வகித்தர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதா இல்லையா என்பது அரசியல் ரீதியான முடிவாகவே உள்ளதாக நிர்மல் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலையீடு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது செய்யும் செயல்முறை அரசியல் ரீதியானது எனவும் அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிணை வழங்கும் செயல்பாட்டில் சட்டமா அதிபர் திணைக்களம் தலையிடுவது என்பது அரசாங்கத்தின் அரசியல் தலையீடு என நிர்மல் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான முழுமையான செயல்முறையும் அரசியல் தலையீடு இல்லாமல் நடக்காது என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
