அறுந்து விழுந்தது மின்கம்பி - ஓட்டோவில் பயணித்த எண்மர் கருகி மாண்டனர்
India
Accident
By Sumithiran
ஓட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் சில்லகொண்டையபள்ளி என்ற இடத்தில் விவசாய பணிகளுக்காக காலையிலேயே ஓட்டோ ஒன்றில் மக்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பி ஒன்று ஓட்டோ மீது அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கியதுடன் ஆட்டோவும் தீப்பிடித்தது.
இந்த விபத்தில் ஓட்டோ சாரதி உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி