அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உட்பட நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 4 பேருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 3 ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் வீதியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது, மஹரகம காவல்துறை பொறுப்பதிகாரிக்கு காயம் ஏற்படுத்தியமை மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே (Wasantha Muthalihge), ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப (Amila Sandeepa) மற்றும் கோசல அங்சமாலி (Kosala Angamaly) முன்னிலை சோசலிசக் கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த (Sameera Koswatta) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.