அடர்த்தியான முடி வளர்சிக்கான ஆயுர்வேத எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அணத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆமணக்கு எண்ணெய்- 3 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்
- பூண்டு- 7 பல்
- நெல்லிக்காய்- 3
- சிறிய வெங்காயம்- 3
பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் இந்த எண்ணெயில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
- அடுத்து இவை அனைத்தையும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இறுதியாக அடுப்பை அனைத்து இந்த எண்ணெய்யை குளிர விட்டு தலைமுடியில் உச்சந்தலை முதல் நுனி வரை தேய்க்க வேண்டும்.
- இப்போது இந்த எண்ணெயை இரவும் தூங்குவதற்கு முன் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
- மறுநாள் காலையில் தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
- இந்த எண்ணெயை தலைமுடியில் ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி