விகாரையிலிருந்து கடத்தப்பட்ட பிக்கு: காவல்துறையில் முறைப்பாடு
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
கொஸ்கம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிக்குவை நேற்று(03) இரவு கடத்திச் சென்றுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹிகுரல தெஹிகஹலந்த போதிராஜாராம விகாரையில் கடமையாற்றிய தேரர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்தோடு, நேற்றிரவு விகாரைக்கு மகிழுந்தில் வந்த சிலர் தேரரை கடத்திச் சென்றதை விகாரையில் தங்கியிருந்த ஒருவர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடத்தல் சம்பவம் தொடர்பில் கொஸ்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |