அதிபர் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்: சுகாஷ் பகிரங்கம்
தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை பெற்றுத் தரக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதால் அதிபர் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ் (K. Sugash) தெரிவித்தார்.
திருகோணமலையில் (Trincomalee) உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (25) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ”அதிபர் தேர்தலில் ரணில் (Ranil), சஜித் (Sajith), அனுர குமார (Anura Kumara) சில வேளைகளில் பொன்சேகா (Sarath Fonseka), தம்மிக்க பெரேரா (Dhammika Perera), சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) ஆகியோர்கள் போட்டியிடலாம். ஆனால் தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை பெற்றுத் தரக்கூடியவர்கள் இவர்களில் யாருமில்லை.
அதிபர் தேர்தல்
இதனால் அதிபர் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும். இல்லாது போனால் பொதுவேட்பாளரை நிறுத்தினாலும் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் ஒன்றை பொது வேட்பாளருக்கு வாக்களித்து மற்றதை சிங்கள பௌத்தர்களுக்கே வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் பாதகத் தன்மைகளையே சிறுபான்மை சமூகம் பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த தேர்தலின் போது சஜித் உடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அவர் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைக்கான தீர்வாக கிராம சபையை இந்தியாவைப் போன்று பஞ்சாயத்து முறையை கூறியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் ( Mahinda Rajapaksa) தீர்வு அவரை நம்ப முடியவில்லை. இது போன்று அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார் பேச்சுவார்த்தைக்கு தான் வரவில்லை, தேசிய மக்கள் சக்தி சார்பில் படித்த புத்திஜீவிகளான பேராசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகளை அனுப்புகிறேன் என கூறி அவரும் வரவில்லை.
சம்பந்தன் சொல்லும் கதை
எனவே தான் எவரும் எமது கருத்தை கேட்க தயாரில்லை இவற்றை வைத்து பார்த்தால் எல்லோரும் ஒன்று தான் பெயர்கள் தான் வித்தியாசம் சாத்தான் பேய் பிசாசு என்ற நிலை தான் உள்ளது. சமஷ்டி தீர்வு தான் எங்களுக்கு தேவை அதிபர் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர்களால் விலை போக முடியாது என உத்தரவாதம் தரமுடியுமா.

இரு நாட்களில் தமிழர்களுக்கு தீர்வு தருகிறோம் எனவே ரணிலுக்கு வாக்களியுங்கள் எனக்கு தொலைபேசி அழைப்பு மூலமாக இதனை அவர் சொன்னார் என்ற மாதிரி சம்பந்தன் (R. Sampanthan) ஐயா சொல்லும் கதை போல் இருக்கும் .
பொது வேட்பாளர் பற்றி பேசியவர்கள் அதிபர் ரணிலுடன் அவர்களது மாளிகைக்குள் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran), சித்தார்த்தன் ( Siddarthan) போன்றவர்கள் உள்ளனர்.
எனவே தமிழ் மக்களுக்கான தீர்வாக பொது வேட்பாளரை நிறுத்தினால் அதன் பாதகத்தை பார்க்கவும் அல்லது பகிஷ்கரிப்பு என்றவற்றை பார்த்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |