கபில சந்திரசேனவின் மரணம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நோக்கி விரல் நீட்டும் சரத் வீரசேகர
Sarath Weerasekara
Bribery Commission Sri Lanka
Kapila Chandrasena
By Jaso
சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணத்திற்கு இலஞ்ச ஆணைக்குழுவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அதன்படி, பொறுப்பானவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என வீரசேகர குறிப்பிட்டார்.
கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்க வேண்டும்
ஐம்பத்தாறு நாட்கள் விளக்கமறியல் சிறையில் துன்புற்ற பின்னர் கபில சந்திரசேன பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஆணைக்குழு விடுத்த கோரிக்கையால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி