வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை தொழிலதிபர் கட்டுநாயக்காவில் கைது
Bandaranaike International Airport
Sri Lanka Customs
Arrest
By Sumithiran
கட்டுநாயக்க விமான நிலையத்தில் எந்த அறிவிப்பும் இல்லாமல் "கிரீன் சனல்" வழியாக ரூ.36,45,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (10) காலை விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
இவர் குருநாகல், மாவதகமவில் வசிக்கும் 29 வயது தொழிலதிபர் ஆவார்..
சுங்க அதிகாரிகளால் கைது
துபாயிலிருந்து இலங்கை விமானம் மூலம் அதிகாலை 02.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அவர் தனது பொருட்களுடன்20,700 வெளிநாட்டு சிகரெட்டுகளையும் 36 மின்னணு சிகரெட்டுகளையும் எடுத்துச் சென்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து, இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி