அரசாங்கத்தின் மீது அதிருப்தியிலுள்ள கத்தோலிக்க அமைச்சர்கள்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கத்தோலிக்க இராஜாங்க அமைச்சர்கள் அண்மைய காலமாக நடந்துள்கொள்ளும் விதத்தில் சிக்கலான தன்மையை காணக்கூடியதாக உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை காணமுடிகிறது.
இதனை முதலில் ஆரம்பித்தவர் இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா. அது மாத்திரமல்லாது தனது அமைச்சு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கூட அவர் கலந்துக்கொள்வதில்லை.
குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில், துறைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரான லங்சா கலந்துக்கொள்ளவில்லை.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அருந்திக பெர்னாண்டோவும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பந்தமாக நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்காதது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் இது அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளை அவர் விமர்சித்தார்.
பேராயரை அருகில் வைத்துக்கொண்ட அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.