வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்
வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அரசினால் கொண்டுவரப்படவுள்ள கடற்றொழில் சட்டதிருத்த வரைபு சம்பந்தமாக வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் முகமாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது யாழில்(Jaffna) உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்றையதினம்(25) இடம்பெற்றது.
வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வடமாகாண கடற்றொழிலாளர்கள்
இதன் போது 10 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. வடமாகாணத்தின் நான்கு மாவட்ட மீனவ பிரதிநிதிகளும் தமது மாவட்டம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்தனர்.

தொடர்சியாக தமது பிரச்சினைகளை தமது சார்பில் நாடாளுமன்றில் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவ பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், MA.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அங்கஜன் இராமநாதன் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







