கண்ணாடி முன் நின்று பாருங்கள் - சூழ்ச்சி எதுவென்று தெரியும்! ராஜபக்சக்களுக்கு பகிரங்க சவால்
எரிபொருள் இல்லாத காரணத்தினால், இலங்கை மின்சார சபை மின்சாரத்தை துண்டித்து வருகிறதே அன்றி குழ்ச்சிகள் எதுவுமில்லை. அந்த சூழ்ச்சி என்ன என்பதை அறிய ராஜபக்ச குடும்பத்தினர் கண்ணாடி முன்னால் சென்று பார்த்தால் அறிந்துக்கொள்ளலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடி மற்றும் எரிசக்தி நெருக்கடி சம்பந்தமான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எரிபொருள் இல்லாத காரணத்தினால், இலங்கை மின்சார சபை மின்சாரத்தை துண்டித்து வருகிறதே அன்றி குழ்ச்சிகள் எதுவுமில்லை. அந்த சூழ்ச்சி என்ன என்பதை அறிய ராஜபக்ச குடும்பத்தினர் கண்ணாடி முன்னால் சென்று பார்த்தால் அறிந்துக்கொள்ளலாம்.
நாட்டில் நிலவும் நெருக்கடி தொடர்பாக பலர் பலவற்றை கூறுகின்றனர். சூழ்ச்சியான கடன் பற்றி கூறுகின்றனர். சீர்குலைப்பு வேலை என்றும் கூறுகின்றனர். ஏற்பட்டுள்ள நெருக்கடியின் ஆழத்தை உணராமல் இருந்து வருகின்றனர்.
மார்ச் மாதம் 4 ஆம் திகதி இலங்கை இந்தியாவுக்கு 500 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டி இருந்ததாக ரொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனடிப்படையில், மார்ச் 4 ஆம் திகதியுடன் சேர்த்து செலுத்த வேண்டிய தொகை 900 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதனை செலுத்த இலங்கை மத்திய வங்கியால் முடியாமல் போனது. 900 மில்லியன் டொலர்களை செலுத்தி இருந்தால், இலங்கை கடந்த 4 ஆம் திகதியுடன் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கும். அது நடக்காமல் உதவும் வகையில் இந்தியா இரண்டு மாத காலம் அவகாசம் வழங்கியது.
வங்குரோத்து நிலையை அடையும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டின் உண்மையான நெருக்கடி.
சூழ்ச்சியும் அதுதான். இதனால், ராஜபக்ச குடும்பத்தினர் கண்ணாடிக்கு முன்னால் சென்றால், சூழ்ச்சி என்ன என்பதை அறிந்துக்கொள்ளலாம் என்றார்.