ஐ.நாவிற்கு போலியான நடிப்பை வெளிக்காட்டும் சிறிலங்கா!

batticalo chanakyan press meet sri Lanka united nation
By Kalaimathy Sep 15, 2021 07:36 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

தமிழர்களுடைய அரசியல் பரப்பில் முக்கியமான வாராமாக கடந்த வாரம் இருந்தது விசேடமாக ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆணையாளரினால் வாசிக்கப்பட்ட அறிக்கை விடயங்கள் தொடர்பாகவும் சமகால அரசியலில் அன்றாடம் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் சில கருத்துகளை  மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா ,சாணக்கியன் முன்வைத்துள்ளார்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஐ.நா மனித உரிமை பேரவையில் வாசிக்கப்பட்ட அறிககையில் மிக முக்கியமான விடயங்கள் பற்றி பேசப்பட்டிருந்தது. இலங்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள் தொடர்பாகவும் அந்த அறிக்கையில் பேசப்பட்டு இருந்தது.  எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், ஐ.நாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இருந்த, மிக முக்கியமான விடயங்கள் உள்வாங்கியிருந்ததாகவும் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று மறைமுகமாக கூறி, இனியும் ஐ.நா மனித உரிமை பேரவையை ஏமாற்றமுடியாது என்ற தகவலையும் கூறியிருக்கின்றார்.

120000 பேருடைய வாக்குமூலங்களை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது. அகவே அது வரவேற்க வேண்டிய விடயம். ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் சரணடையும் நிலைப்பாடு இருக்கும்போதும் கூட கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது ஐ.நாவுக்கு போலியான ஒரு நடிப்பை வெளிக்காட்டுகின்றது என்பதை ஐ.நா விளங்கிகொள்ள வேண்டும்.

விசேடமாக மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் மிக மோசமாக பொலிசாரால் தாக்கப்பட்டு இருந்தனர்  வடக்கு கிழக்கில் பொலிஸாரின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றதை வண்மையாக கண்டிக்கின்றோம். பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்து வைத்திருக்கும் கைதிகளை அனுராதபுரம் சிறையில் வரிசையில் முலங்கால் இட்டு அவர்களது தலையில் துப்பாகி வைத்து அச்சுறுத்தியதாக சமுக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பாக அந்த இராஜாங்க அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நாங்கள் இவற்றையெல்லாம் செய்ய மாட்டோம் என்று கூறி விட்டு தற்போது இலங்கை அரசாங்கம் செயற்படுவது அவர்களுடைய இரட்டை வேடத்தை காட்டுகின்றமை துரதிஸ்டவசமாக இருக்கின்றது .

தமிழர்களை பாதுகாக்க வேண்டிய ஒரு சில அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக மௌனம் காப்பது ஒரு கவலையான விடயம். மட்டக்களப்பிலே பல இடங்களில் அரசாங்க கட்சி சார்ந்த அரசியல்வாதிகள் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கத்தைச் சார்ந்த சிலர் துணை போகின்றனர்.

இவ்வாறே மட்டக்களப்பு அரசு சார்ந்த அரசியல்வாதிகள் மக்களுடைய காணிகளை சுவீகரிக்க அரசுடன் இணைந்து செயற்படுவதை அறியும்போது வேதனை அளிக்கின்றது.  கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சதோச நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  நான் நினைக்கின்றேன் இந்த சதோச நிலையம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்ட காலத்திலிருந்து மூன்றாவது தடவையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சதோச திறப்பு விழாவை ஒரு பெரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு தெரிய வேண்டும் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல சதொச நிறுவனங்களை இந்த அரசாங்கம்தான் மூடி இருந்தது . உண்மையிலேயே இதற்கு மாற்று வழியாக கூட்டுறவு சங்கங்கள் ஊடாக பொருட்களை வழங்கும் பொழுது மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச மக்களும் பயனடைவார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

இது சம்பந்தமாக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் நான் கூறியிருந்தேன். மக்கள் தொடர்பான விஷயங்களை அவர் முன்னெடுப்பதில் கொஞ்சம் பின்வாங்குவது  அறியமுடிகின்றது. இன்று பட்டதாரிகள் சம்பள விடயம் தொடர்பாக பேசப்படுகின்றது உண்மையிலேயே இலங்கையில் இராஜாங்க அமைச்சர்கள் என்று பலபேர் சுற்றிதிரிகிறார்கள். அமைச்சர்களது அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு நிதியமைச்சர் கூறியிருக்கின்றார்.

இந்த இராஜாங்க அமைச்சர்கள் வாகனங்களில் சுற்றி திரிவதை நிறுத்திவிட்டு சம்பளங்களை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் நான் எனது சம்பளத்தை இந்த பட்டதாரிகளுக்கு வழங்க தயாராக இருக்கின்றேன். ஆகவே இது தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டி உள்ளது . அண்மையில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஒரு கடிதம் பாரிய பிரச்சினையாக மாறி இருந்தது. உண்மையிலேயே அது நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பம் இடபட்டதா என்ற கேள்வியும் இருக்கின்றது.

இது சம்பந்தமான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரினால் அனுப்பப்பட்டதாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது இந்த போலியான கடிதத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தான் ஏற்பாடு செய்த ஒரு ஊடக சந்திப்பில் கூறியிருக்கின்றார்.

இது சம்பந்தமாக கட்சி கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன்.  உண்மையிலேயே தமிழரசுக் கட்சிக்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன நடக்குது என்பது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எனக்கு கூடிய பங்கு இருக்கின்றது. ஆகவே இது தொடர்பான விடயங்களை மிக விரைவில் தலைவர் அறிவிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025