ஐ.நா உயர்ஸ்தானிகர் மீது நம்பிக்கை இல்லை : செம்மணி விவகாரத்தில் முன்னாள் எம்.பி கருத்து
இஸ்ரேலில் (Israel) நடைபெறும் படுகொலைகள் குறித்து விசாரணை முன்னெடுக்காத உயர்ஸ்தானிகரிடம் இருந்து செம்மணி விடயத்தில் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் (Abdullah Mahroub) தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் (Kinniya) உள்ள அவரது இல்லத்தில் நேற்று (29.06.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இஸ்ரேலிய கொடும் கோலர்களால் சிறு குழந்தைகளும், பெண்களும் மருத்துவமனை தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்ற போதும் அது தொடர்பில் எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுக்காத ஒரு ஆணையாளரால் செம்மணி தொடர்பான தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.

செம்மணியில் இருந்து ஐ.நா ஆணையாளரை திருப்பி அனுப்ப திட்டமிட்ட அரசு: முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி
செம்மணி படுகொலை
ஏற்கனவே நவநீதன் பிள்ளை, செம்மணி தொடர்பாக நட்ட ஈடு வழங்குவது தொடர்பாக அதன் உண்மை தன்மை தொடர்பாக மிக விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலியர்களால் காசா மக்கள் கொல்லப்படுவதை இவர்களால் கண்டிக்கவோ அறிக்கை விடவோ முடியாத போது எவ்வாறு செம்மணிக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்டகாலமாக புரையோடி போய்க்கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக பேசிய போதும் அவர் நாட்டை விட்டு செல்கின்ற போது சொல்லியிருக்கின்ற அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
