மருந்து இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள்
Colombo
Hospitals in Sri Lanka
Medicines
By Aadhithya
மஹரகம அபேக்சா வைத்தியசாலையில் (Apeksha Hospital - Maharagama) கீமோ (Chemotherapy) சிகிச்சை முறைமைக்கு பயன்படுத்தப்படும் மருந்து இன்மையால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயத்தை அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ (Thushara Ranadeva) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த மருந்தை சந்தையில் கொள்வனவு செய்வதாயின், சுமார் ஒரு லட்சம் ரூபா செலவாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்
அதிபர் நிதியம்
அந்தவகையில், அதிபர் நிதியம், நன்கொடைகள் மூலம் வழங்கப்படும் கீமோ சிகிச்சைக்கான மருந்துகள் போதுமானதாக இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீண்டகாலமாக இந்த மருந்திற்கு நிலவும் தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி