ஐ.பி.எல் 2025 : இன்று மோதும் சென்னை vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் (Indian Premier League) தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
49ஆவது லீக் போட்டி
இத்தொடரில் இன்றைய தினம் (30.04.2025 நடைபெறும் 49ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 5ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
