புதுப்பிக்கப்படவுள்ள இலங்கை உச்ச நீதிமன்ற வளாகம் : மில்லியன் கணக்கில் சீன அரசின் உதவி
சீன அரசின் உதவியுடன் இலங்கை (Sri Lanka) உச்ச நீதிமன்ற வளாகத்தைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான ஒப்பந்தமொன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (30) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தமானது நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங் ( Qi Chen Hong) ஆகியோர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை விவகாரங்கள்
இதனடிப்படையில், இத்திட்டத்திற்கு 229 மில்லியன் யுவான் செலவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த ஒப்பந்தத்தில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க (Nihal Ranasingh) மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் ஆலோசகர் டாங் யாண்டி (Tang Yandi) ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |