பார்சலால் பரவிய ஒமைக்ரோன் - கனடா மீது சீனா கடும் குற்றச்சாட்டு
கனடாவில் இருந்து வந்த பார்சல் மூலமாகவே பீஜிங்கிற்குள் ஒமைக்ரான் நுழைந்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டிள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் சீனாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 11ஆம் திகதி பீஜிங் நகரில் கனடாவில் இருந்து வந்த பார்சலை திறந்து பார்த்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அந்த பார்சல் கனடாவில் இருந்து அமெரிக்கா, ஹொங்கொங் வழியாக சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமே கனடாவில் இருந்து ஒமைக்ரான் நுழைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களை முழுமையாக கிருமிநாசினி தெளித்த பின்னரே கையாள வேண்டும் எனவும் முழுமையாக தடுப்பூசி செலுத்திய பணியாளர்களை மட்டுமே இந்த பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.