பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
சுமார் 72 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமான சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சீனநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (02.04.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கார்ட்டூன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH-179 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தின் ஊடாக வெளியேற முயன்ற போதே, சந்தேக நபரை அங்கு கடமையிலிருந்த சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் சீனாவை சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது, அவர் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கார்ட்டூன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 07 வெவ்வேறு வகையான சுமார் 48,000 சிகரெட்டுகள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்