த.வெ.கவில் சான்றிதழை மறந்து கூட்டத்தொடருக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்கள்!
தவெக அமைச்சரவையில் எம்.எல்.ஏவாகப் பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் அவர்கள் பதவியேற்கவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் 17 ஆவது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (11-05-2026) கூடியது.
தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.
வெற்றிச் சான்றிதழ்
இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றார்.
அவரைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் பிரபு ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றனர்.
பதவியேற்பு
இந்தநிலையில் எம்.எல்.ஏவாகப் பதவியேற்க வந்தவர்களில் இருவர் வெற்றிச் சான்றிதழை மறந்துவிட்டு வந்ததால் பதவியேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் கீர்த்தனா மற்றும் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோரே இவ்வாறு பதவி ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் தவெக அமைச்சரவையில் இடம் பெற்ற ஒன்பது அமைச்சர்களில் எட்டு பேர் இன்று எம்.எல்.ஏவாகப் பதவியேற்றுள்ளனர்.
இருந்தாலும் எதிர்வரும் 15 நாட்களுக்குள் அவர்களால் பதவியேற்க முடியும் என்பதால் அவர்களுக்காகப் பதவியேற்பு தள்ளிப்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |